Thursday, 1 September 2022

அடைக்கலம் நீயே….

 आकाङ्क्ष्यमाणफलदानविचक्षणायाः ।

कामाक्षि तावककटाक्षककामधेनोः ।
सम्पर्क एव कथमम्ब विमुक्तपाश- 
बन्धाः स्फुटं तनुभृतः पशुतां त्यजन्ति ॥76॥

ஆகாங்க்ஷ்யமாண பலதான விசக்ஷணாயா:

காமாக்ஷி தாவக கடாக்ஷக காமதேனோ: |

ஸம்பர்க ஏவ கதமம்ப விமுக்தபாஶ-

பந்தா: ஸ்புடம் தனுப்ருத: பஶுதாம் த்யஜந்தி ||76||

தாயே காமாக்ஷி! விரும்பிய பலனைத் தருவதில் ஸமார்த்தியமுள்ள உனது கடாக்ஷமாகிற  காமதேனுவின் ஸம்பந்தம் ஏற்பட்டவுடனேயே பாசங்களின் கட்டுகளிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாய்  மனிதர்கள்  பசுத்தன்மையை தெளிவாக விட்டுவிடுகிறார்கள்.. அதாவது, அம்பிகையின் கடாக்ஷம் கிடைக்கப்பெற்ற மாத்திரத்திலேயே பக்தர்கள் தங்கள் பாசங்களிலிருந்து விடுவிக்கப்பட்டு ஜீவன் முக்தியை அடைந்து விடுகிறார்கள் என்பது தாத்பர்யம்


                                                அடைக்கலம் நீயே….


                                                          பல்லவி

                                        அடைக்கலம் நீயே அன்னையே காமாக்ஷி

                                        கடைக்கண்ணருள் பெற உனையே துதித்தேன்

                                                      அனுபல்லவி

                                        இடைக்குலத்துதித்த கேசவன் சோதரி

                                        விடை வாகனன் சிவனிடம் கொண்ட நாயகி

                                                           சரணம்

                                       கடைவிழியாம் காமதேனுவெனும் பார்வை

                                       கிடைத்ததுமே உனதடியாரனைவரும்

                                       விடைபெற்று பந்த பாசங்களைத் துறந்து

                                       அடைகிறார்  மோக்ஷமெனும் பரம்பதம்தனை

No comments:

Post a Comment