Thursday, 4 February 2016

சித்தி விநாயகன்


                      சித்தி விநாயகன்
                     
                            பல்லவி

                சித்தி விநாயகனைப் பணிந்தேன்
                காணிப்பாக்கம்தனில் குடிகொண்ட - வர

                         அனுபல்லவி

                நித்தியம் துதித்திடும் அடியவரெல்லாம்
                சத்திய சத்திய நெறியில் நடந்திடச் செய்திடும்

                            சரணம்

                சித்தர்கள் யோகியர் ஞானியர் துதித்திடும்
                தத்துவப் பொருளை உத்தமிப் புதல்வனை
                முத்தமிழ் கலைகளை ரசித்திடும் சுமுகனை
                எத்திசையும் புகழ் விளங்கும் கேசவன் நேசனை

No comments:

Post a Comment