Thursday, 4 February 2016

காணிப்பாக்கம் கணபதி


                காணிப்பாக்கம் கணபதி


                          பல்லவி

               காணிப்பாக்கம் கணபதியைப் பணிந்தேன்
               கடைக்கண்ணருள் வைத்து காத்தருள வேண்டுமென

                        அனுபல்லவி

               கேணியில் தானாகத் தோன்றிய கரிமுகனை
                வரங்களையளித்திடும் சித்திவிநாயகனை

                               சரணம்

                தேவரும் மூவரும் கணங்களும் நந்தியும்
                சேவற்கொடியோன் முருகனும் முனிவரும்
                யாவரும் வணங்கிடும் கேசவன் மருகனை
                தேவாதி தேவனை வேழமுகத்தோனை

No comments:

Post a Comment