அழுந்தூர் தேவாதி ராஜன்
பல்லவி
தேரழுந்தூர் ஆமருவியப்பனைக் கேசவனை
பார்புகழும் மாதவனை மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
சாரதியாய் பார்த்தனுக்கு துணையாக நின்று
பாரதப் போர்நடத்தி கௌரவரை அழித்த
சரணம்
நீராய் நிலமாய் நெருப்பாய் நீள் விசும்பாய்
காற்றாய் நின்றானை தேவாதி ராஜனை
பேராயிரமுடைய நாராயணனை
தீரா வினைதீர்த்து ஆண்டருள வேண்டுமென
No comments:
Post a Comment