சிங்கார கணபதி
பல்லவி
சிந்தை கவர்ந்திடும் சிங்கார கணபதியை
வந்தனை புரிந்து மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
தந்தையும் தாயும் குருவும் அனைத்து
சொந்தமும் பந்தமும் அவனென துணிந்து
சரணம்
நந்தியும் கணங்களும் தேவரும் முனிவரும்
கந்தனும் பிரமனும் இந்திரனும் வணங்கிடும்
தந்தி முகத்தோனை கேசவன் மருகனை
இந்திநிளம்பிறை சூடிய கரிமுகனை
No comments:
Post a Comment