Monday, 3 August 2026
Tuesday, 30 June 2026
கால நேரம்……
கால நேரம்……
பல்லவி
கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்
மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
நீலவண்ணன் நீயே பாலகோபலனே
ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே
சரணம்
சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட
பாலராமனே ஜானகி லோலனே
கோலமயில் பீலி கொண்டையில் சூடிய
பாலகோபாலனே நவநீதக்கண்ணனே
Saturday, 27 June 2026
எப்படி பாடினால்……
எப்படி பாடினால்……
பல்லவி
எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்
அப்படி பாடுகிறேன் சென்ன கேசவா
அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல்
சரணம்
எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி
தப்பேதும் நான் செய்தவனில்லை
அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்
ஒப்பிலா அப்பனே நாராயணனே
Monday, 20 April 2026
பாரில் உனையன்றி….
பாரில் உனையன்றி….
பல்லவி
பாரில் உனையன்றி தாயே பராசக்தி
வேறு யார் துணையெனக்கு பராசக்தி
அனுபல்லவி
நேரில் நின்றுனைத்துதித்தேன் பராசக்தி
கோரிக்கை ஏற்றிடுவாய் தாயே பராசக்தி
சரணம்
மாரியே பராசக்தி மகிடனை
வதைத்தவளே
சேரிடமறியாமல் சேர்ந்து தீச்செயல் பல
புரிந்தேன்
ஆறுதல் தந்தெனையே ஆண்டருள்வாய்
தாயே
யாருக்கும் தீமை செய்யா வாழ்வெனக்
கருள்வாயே
கற்ற கல்வி பெற்ற செல்வம் எதுவும்
சதமல்ல
சுற்றம் சுகமெல்லாம் துறந்து உன்னைச்
சரணடைந்தேன்
பற்றற்ற நிலை பெறவே தாயே பராசக்தி
உற்ற துணை நீயே சென்னகேசவன்
சோதரியே
*****
ॐ दाशवदनाय विद्महे
ज्वामाळायाई धीमही
तन्नो परशक्ति प्रचोदयात् ॥
நாம் பத்துத் திசைகளிலும் இருப்பவளை அறிந்துகொள்வோம்.
ஒளிரும் மாலை அணிந்தவளைத் தியானிப்போம்.
அந்தப் பராசக்தி எங்கள் புத்தியை/அறிவை ஒளிரச் செய்யட்டும்.
Sunday, 19 April 2026
காமாக்ஷி….
காமாக்ஷி….
பல்லவி
காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்
பாமரர் கொண்டாடும் ஜொன்னவாடா தலத்துறை
அனுபல்லவி
மாமாயன் கேசவன் மனம் விரும்பும் சோதரி
மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி
சரணம்
நாமங்களாயிரமுடைய நாராயணி
நாமகள் பூமகள் சாமரம் வீசும்
கோமகளே ஶ்ரீராஜராஜேச்வரி
பூமண்டலம் போற்றும் புவனேச்வரி
ஓமெனும் மந்திரத்தினுட்பொருள் நீயே
காமனுக்கருள் செய்த காமேச்வரியே
தேமதுரத் தமிழாலுனைப் போற்றிப்பாடி
தூமலர் தூவியுன் மலரடி பணிந்து
ஜொன்னாவாடா காமாக்ஷி
ஜொன்னாவாடா காமாக்ஷி மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் ஜொன்னவாடாவில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இக்கூட்டத்தில் நெல்லூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆலயம் பெண்ணாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது 1150 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காமாட்சி தேவி சக்தியின் அவதாரமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரால் இங்கு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டது. நவ ஆவரண பூஜையும், ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமிக்கும், ஸ்ரீ காமாக்ஷி தாயிக்கும் தினமும் கல்யாணோற்சவம் நடைபெறும். தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சக்கரம் பிரம்மோத்ஸவம் தெலுங்கு மாதத்தின் வைசாக மாசத்தில் நிகழ்த்தப்பட்டது மற்றும் தசரா விழாவின் ஒன்பது நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது 1150 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
Tuesday, 14 April 2026
ஶ்ரீராம எனறழைத்து…..
ஶ்ரீராம எனறழைத்து…..
பல்லவி
ஶ்ரீராமா என்றழைத்து உனையே துதித்தேன்
நீயே கலியகத்தில் கண்கண்ட தெய்வம்
அனுபல்லவி
நாராயணன் மாதவன் கேசவனென்று
ஓராயிரம் பெயர் உனக்கிருந்தாலும்
சரணம்
தீரா வினை தீர்க்கும் தினகரகுலத்தோனே
காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த
மாராபி ராமனே மன்னு பரந்தாமனே
பாராளும் வேந்தனே பரமபத நாதனே
Monday, 13 April 2026
கேசவா மாதவா…..
கேசவா மாதவா…..
பல்லவி
கேசவ மாதவ கோவிந்தா் என்றழைத்து
ஆசையுடனுனைத் துதித்துப் போற்றினேன்
அனுபல்லவி
ஈசனும் பிரமனும் போற்றி வணங்கிடும்
பேசும் தெய்வமே கலியுக க்கடவுளே
சரணம்
காசினியோர் கொண்டாடும் மாசிலாமணியே
கேசியெனும் குதிரை முக அரக்கனைக்கொன்றவனே
பாசத்தளைகளைக் களைந்திடும் பரந்தாமனே
வாச மலர் தூவியுன் மலர்ப்பதம் பணிந்து
Tuesday, 7 April 2026
சாமிநாதன் எனை…..
சாமிநாதன் எனை…..
பல்லவி
சாமிநாதன் எனைக் காத்தருள வேண்டும்
வள்ளி மணாளன் வேலாயுதன் சிங்காரவேலன்
துரிதம்
பாமரர் பண்டிதர் நரர் சுரரிந்திரன் நாரதர் நான்முகன்
பாமகள் பூமகள் சுகசனகாதியர் கரம் பணிந்தேத்தும்
அனுபல்லவி
காமனை எரித்த சிவன் மகன் கார்த்திகேயன்
தாமரை நாபன் கேசவனின் அன்பு மருமகன்
சரணம்
பூமிநாதன் வாமத்திலமர்ந்திருக்கும்
காமேச்வரி மலைமகள் கொஞ்சும் குமரன்
மாமறைக்குப் பொருள் சொன்ன சிவகுமரன்
பாமரரும் பண்டிதரும் வணங்கும் தமிழ்க்கடவுள்
Thursday, 12 March 2026
நாராயணனே……
நாராயணனே……
பல்லவி
நாராயணனே முழுமுதற் கடவுள்
ஶ்ரீராமனுமவனே ஶ்ரீகிருஷ்ணனுமவனே
அனுபல்லவி
பேராயிரமுடைய சாரங்கபாணியவன்
ஆராவமுதன் அழகியமணவாளன்
சரணம்
தீராவினை தீர்க்கும் திருவரங்கநாதன்
காரார் குழலாள் ஶ்ரீ மகாலக்ஷ்மியை
மார்பினில் வைத்திருக்கும் வைகுண்டவாசன்
பாரோர் பணிந்தேத்தும் குறையில்லா கோவிந்தன்
*******
“ குறையில்லா கோவிந்தன் “
கலியுகத்தில் கண்கண்ட தெய்வம் திருவேங்கடமுடையான். திருமலை திருப்பதியில் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் பெருமாள். பெருமாளுக்கு ஆயிரம் நாமங்கள். அவற்றுள் சிறப்பு மிக்க நாமங்கள் பன்னிரண்டு. அவற்றுள்ளும் சிறப்பு மிக்க நாமமாகப் போற்றப்படுவது `கோவிந்தா' என்னும் நாமம். பாகவதத்தில் பகவான் கிருஷ்ணருக்கு பட்டாபிஷேகம் செய்யும்போது சூட்டப்பட்ட நாமம் `கோவிந்தா' என்பது. ஆதி சங்கரரும் தனது பஜகோவிந்தத்தில் கோவிந்த நாமத்தையே முன்னிலைப்படுத்துகிறார். ஆண்டாள், `குறையொன்றும் இல்லாத கோவிந்தா' என்று சொல்லிப் போற்றுகிறார். அவதாரத்தில் கிருஷ்ணாவாதாரமே பிடிக்கும் என்பதுபோல், நாமங்களில் 'கோவிந்தா...' என்ற நாமமே மகிழ்ச்சி அளிக்கிறது என்கிறான் மாயக்கண்ணன்..
அந்தப் பெயரில் அப்படி என்னதான் உள்ளது ? 'கோவிந்தா' என்ற சொல் மட்டுமே அவனது பத்து அவதாரங்களையும் குறிக்கும்.
'கோ' என்றால் உலகம், 'விந்தன்' என்றால் காப்பாற்றுபவன். இந்த உலகத்தின் உயிர்களை எல்லாம் காப்பாற்றுபவன் என்று பொருள். கோ என்பதற்கு வேதம் என்றும் பொருள். வேதத்தை மீட்டுத் தந்த மச்சாவதாரத்தையும் கோவிந்தம் குறிக்கிறது. கோ என்றால் பர்வதம் என்ற பொருளும் உண்டு. மலையைத் தாங்கிய கூர்மாவதாரத்தையும் கோவிந்தம் நினைவு ஊட்டுகிறது.
பூமியையும் கோ எனலாம். கோவிந்தா எனும்போது பூமியைத் தனது கொம்பினால் தூக்கிய வராக அவதாரமும் மனதில் தோன்றுகிறது. நரசிம்மனுக்கும், வாமனனுக்கும், பரசுராமனுக்கும் கோவிந்தன் என்பது மற்றுமொரு பெயரே. கோ என்றால் ஆயுதம். சமுத்திரத்து நீரைச் சரித்து பூமியைக் கலப்பையால் இழுத்ததால் பலராமனுக்கும் கோவிந்தன் என்ற பெயராயிற்று.
கோ என்றால் பசு. பசுவை ரட்சித்தவன் என்பதால் கண்ணனுக்கும் கோவிந்தன் என்ற பெயராம்.
இப்படி, ஒவ்வொரு அவதாரத்திலும் கோவிந்த நாமம் ஒலிக்கிறது. கோவர்த்தன மலையைத் தூக்கிய காரணத்தால் கண்ணனுக்கு கோவர்த்தனன் என்று பெயர் சூட்டி பட்டாபிஷேகம் செய்தான் இந்திரன்.
அப்படிப்பட்ட, ஞானத்தின் தெய்வமான, குறையொன்றும் இல்லாத கோவிந்தனைத் தொழுது வணங்கினால், அவனது பத்து அவதாரங்களையும் ஒன்று சேர்த்து வணங்கிய பலன் கிட்டும். இதையே 'குன்றம் ஏந்தி குளிர்மழை காத்தவன், அன்று ஞாலம் அளந்த பிரான், பரன் ஒன்று சேர் திருவேங்கட மாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே..' என்று நம்மாழ்வார் பாடிட, அதனை நன்குணர்ந்த கோதை, குறைகள் அனைத்தையும் தீர்த்திடும், கோவிந்த நாமாவளியைப் பாடி மகிழ்ந்திட இருபத்து எட்டாம் நாளன்று அழைக்கிறாள் ..!!
நித்தம் ஒரு புதுப்பாடல்…..
நித்தம் ஒரு புதுப்பாடல்…..
பல்லவி
நித்தம் ஒரு புதுப்பாடல் உனைப்போற்றி நான் பாட
உத்தமனே கேசவனே நீயனக்கு அருள்வாய்
அனுபல்லவி
பத்து தலை ராவணனின் கதை முடித்த ராகவனே
வித்தகர் ஞானியர் போற்றும் சத்தியமூர்த்தியே
சரணம்
உத்தமி திருமகளைத் தன் மார்பில் சுமப்பவனே
நித்திலத்தொத்தெனும் நாமம் உடையவனே
கத்தும் கடலலை மீதுறங்கும் திருமாலே
சித்தத்தில் வைத்து நான் துதிக்கும் நாராயணனே
Thursday, 22 January 2026
என்னைக்காக்க…..
என்னைக்காக்க…..
பல்லவி
என்னைக்காக்க உனையன்றி வேறு யாருளார்
சென்ன கேசவனே செங்கமல நாயகனே
அனுபல்லவி
புன்னை மரத்தடியே புல்லங்குழலூதி நிற்கும்
கண்ணனே கார்மேகவண்ணனே கோவிந்தா
சரணம்
அன்னை தேவகியின் அன்புச் செல்வனே
உன்னை நினைந்துருக்கும் ராதையின் மனங்கவர்
கன்னலே தேனே கம்சனை மாய்த்தவனே
சொன்ன வண்ணம் செய்த திருமாலே நாராயணா
Wednesday, 21 January 2026
உத்தமனே ஶ்ரீராமா…..
உத்தமனே ஶ்ரீராமா…..
பல்லவி
உத்தமனே ஶ்ரீராமா உனைக்கூவியழைத்தேனே
சத்தமுன் காதில் விழவில்லையா கேசவனே
அனுபல்லவி
பித்தன் சிவன் போற்றிய நாமமுடையவனை
கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே
சரணம்
எத்தனையோ ஜென்மங்களாய் செய்த பாவங்கள்
அத்தனையும் சேர்ந்தெனை வாட்டுதே
மொத்தமும் தொலையவே உனைத் துதித்தேன்
மெத்தனேனய்யா ஶ்ரீராமா உனக்கு
Tuesday, 20 January 2026
ராஜமாதங்கி
ராஜமாதங்கி
சியாமளா அம்பிகை ராஜமாதங்கி எனவும் அழைக்கப்படுபவள். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆட்சி புரியும் பச்சை மரகதக் கல்லான மீனாட்சி அம்மன் ஆறு கால பூஜைகளிலும் ஆறு பெயர்களில் அருள்பாலிக்கிறார். ராஜமாதங்கி என்ற பெயரில் கல்வித் தாயாக அருள்பாலிக்கிறார்.
சியாமளா என்ற பெயரில் அஷ்ட ஐஸ்வர்யங்களையும் அளிக்கும் செல்வத்துக்கு அதிபதியாக விளங்குகிறார். சாவித்ரி என்ற பெயரில் உடலுக்கு ஆரோக்கியத்தையும் சக்தியையும் அளிப்பவராக சிறக்கிறார். மந்த்ரிணி என்ற பெயரில் சகல பாவங்களையும் நீக்குபவராக செயல்படுகிறார். கௌரியாக சகல சுக சௌபாக்கியங்களையும் அருள்பவராக திகழ்கிறா.ர் மீனாட்சி என்ற பெயரில் உயிர்களை கண்ணை இமை காப்பது போல் காத்து இம்மையிலும் மறுமையிலும் நற்பலன்களை அளிக்கிறார்.
சியாமளா எனப்படும் மாதங்கி பச்சை நிறம் உடைய இவள் வீணை ஏந்தி இருப்பாள். கல்விக்கும் ஞானத்துக்கும் அதிபதி. கற்றவனுக்கு என்றும் அழிவில்லை என்பதை ராஜமாதங்கி வழிபாட்டின் மூலம் மாதங்கி மக்களுக்கு அருள்கிறாள். மதுரை மீனாட்சி அம்மன் ராஜமாதங்கி, சியாமளா சக்தி பீடம் எனவும் அழைக்கப்படுவதால் சியாமளா நவராத்திரி நாட்களில் மதுரை மீனாட்சி அம்மனை, மீனாட்சி பஞ்ச ரத்தினம், மீனாட்சி அஷ்டோத்திரம், மீனாட்சி நூற்றியெட்டு போற்றி போன்றவற்றைக் கூறி வழிபட்டு சியாமளா நவராத்திரியின் பரிபூரணமான அருளைப் பெறலாம். சியாமளா நவராத்திரி காலம் ஜனவரி 19 முதல் ஜனவரி 27 வரை உள்ள ஒன்பது நாட்களாகும்.
Monday, 19 January 2026
Friday, 16 January 2026
நமச்சிவாயயென…..
நமச்சிவாயயென…..
பல்லவி
நமச்சிவாயயென நாவாரத்துதித்தேன் - ஓம்
துரிதம்
அமரரும் முனிவரும் கணங்களும் நந்தியும்
அமரேந்திரனும் வணங்கிடும் சிவனை
அனுபல்லவி
சமமென தனக்கருவரில்லாத ஈசனை
ஆமருவியப்பனெனும் கேசவன் நேசனை
சரணம்
இமவான் மகளை மணந்தவனை பசுபதியை
உமா மகேச்வரனை சொக்கநாதனை
சோமசுந்தரனை ஆலவாயழகனை
சாம முதல் வேதங்கள் போற்றும் சங்கரனை
காமனையெரித்தவனை கங்காதரனை
மமதையில் திளைத்த திரிபுரனை வதைத்தவனை
குமரனைப் படைத்தவனை நெற்றிக்கண்ணனை
எமனைக் காலாலுதைத்த காலகாலனை
Wednesday, 14 January 2026
மீண்டுமாதி கேசவனை….
மீண்டுமாதி கேசவனை….
பல்லவி
மீண்டுமாதி கேசவனைப் போற்றித்துதித்தேன்
ஆண்டவன் அவனே என்றுணர்ந்து நான்
அனுபல்லவி
பாண்டவர் நேயனை பக்த சகாயனை
தீண்டும் அரவின் மேல் பள்ளி கொண்ட மாதவனை
சரணம்
காண்டவ வனமெரித்த நர நாராயணனை
வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் கண்ணனை
ஆண்டாள் நேசனை அரங்கநாதனை
மாண்டபின் இனி பிறந்திடாதிருந்திட
அக்காரக்கனியை…..
அக்காரக்கனியை…..
பல்லவி
அக்காரக்கனியை நரசிம்மனைத்துதித்தேன்
எக்காலத்திலுமெனைக் காக்கும் கேசவனை
அனுபல்லவி
செக்கச்சிவந்த கண்ணுடைய செங்கண்ணனை
சக்கரக்கையனை சர்வலோகநாயகனை
சரணம்
உக்கிர மூர்த்தியே ஆனாலுமவன்
பக்தருக்கருளும் பரமதயாளன்
திக்கெட்டும் புகழ் விளங்கும் திருமால் கோவிந்தன்
மக்கள் கொண்டாடும் மாலோலன் நாராயணன்
Monday, 12 January 2026
உன் பாதமே……
ஶ்ரீமஹாராஞ்ஞி ஸ்தவம் :
சராசரஜக³த்ஸ்ருʼஷ்டிஸ்தி²திஸம்ஹ்ருʼதிகாரிணி ।
நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம்
" அசையும் அசையாப் பொருட்கள் நிரம்பிய ப்ரபஞ்சத்தை உண்டாக்கி, காத்து அழிக்கும் பராசக்தியும், மஹாராஞ்ஞியுமான தாயே!! நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"
ப்³ரஹ்மவிஷ்ணுமஹேஶாநவந்தி³தே கி³ரிநந்தி³நி ।
நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் ॥
"ப்ரஹ்மா விஷ்ணு மஹேச்வரர்களால் ஸதா வந்திக்கப்பட்டவளும், மலையரசனின் மகளுமான ஶ்ரீபார்வதி தேவியே!! ஶ்ரீமஹாராஞ்ஞியே!! தாயே!! உனக்கு நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"
உன் பாதமே……
பல்லவி
உன் பாதமே சரணடைந்தேன் உமா தேவி
என்னைக் காத்தருள வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே பார்வதியே
அன்னபூரணியே மலையரசன் மகளே
சரணம்
சுராசுரரும் சுகசனகாதியரும்
அரனயனரியும் பணி திரிபுரசுந்தரியே
சராசரமனைத்தும் படைத்து காத்தழிக்கும்
பராபரையே பரமேச்வரியே
வினைப்பயனால்…..
வினைப்பயனால்…..
பல்லவி
வினைப்பயனால் கட்டுண்ட என் மனத்துள்
உனையறியும் ஆவல் கொண்டேன்
கேசவனே
அனுபல்லவி
சுனை நீராய்க் கருணை வெள்ளம்
சுரக்கும்
இனியவனே ஶ்ரீமன் நாராயணனே
சரணம்
நினைக்கும் காணும் நீரும் மரமும்
அனைத்தும் மாயையென உரைக்கக்
கேட்டேன்
தனையறிந்தால் தன்னுளே
எனையறிந்தால்
உனையறியலாம் என்றுணர்ந்தேன்
பரம்பொருளே
ஏனிந்த சோதனையை…😭😭
ஏனிந்த சோதனையை…😭😭
பல்லவி
ஏனிந்த சோதனையை எனக்களித்தாய்
தேனே கேசவனே திகட்டாத தெள்ளமுதே
அனுபல்லவி
வானவரும் தானவரும் சுகசனகாதியரும்
ஏனையோனைவரும் வணங்கும் பரம்பொருளே
சரணம்
தேனுகாசுரனை வதைத்தவன் சோதரனே
பானுவைத்திங்களை கண்களாயுடையவனே
ஊனுயிரனைத்தும் நீயென்றே நினைத்தேன்
போனெனும் கைபேசி தனை இழக்கச்செய்து