வரமோ சாபமோ……
பல்லவி
வரமோ சாபமோ இரண்டும் வேண்டேன்
கரம் பணிந்தேத்தி உனையே துதித்தேன்
அனுபல்லவி
அரனயன் போற்றும் ஆதி கேசவா
சரணடைந்தேன் உந்தன் பாதகமலமே
சரணம்
மரணம் பிறப்பென்னும் மாயச்சுழலகலும்
வரமொன்றினையே உன்னிடம் வேண்டினேன்
சுரக்கும் ஊற்று போல் கருணை நிறந்த
பரந்தாமனே நாராயணனே
No comments:
Post a Comment