என்னைக்காக்க…..
பல்லவி
என்னைக்காக்க உனையன்றி வேறு யாருளார்
சென்ன கேசவனே செங்கமல நாயகனே
அனுபல்லவி
புன்னை மரத்தடியே புல்லங்குழலூதி நிற்கும்
கண்ணனே கார்மேகவண்ணனே கோவிந்தா
சரணம்
அன்னை தேவகியின் அன்புச் செல்வனே
உன்னை நினைந்துருக்கும் ராதையின் மனங்கவர்
கன்னலே தேனே கம்சனை மாய்த்தவனே
சொன்ன வண்ணம் செய்த திருமாலே நாராயணா