மயிலை வளர்…..
பல்லவி
மயிலை வளர் கற்பகமே அற்புதமே
கயிலைநாதன் கபாலீசன் மனம் விரும்பும்
அனுபல்லவி
மயில் வாகனன் நர்த்தன கணபதி போற்றும்
தையலே உமையே கேசவன் சோதரி
சரணம்
இயலிசை நாட்டிய நாடகம் ரசித்திடும்
ஒயிலே சயிலேந்திரன் பெற்ற மாதவமே
உயிருடல் தந்து எனைக்காக்கும் அன்னையே
நோயம் பவக்கடல் கடந்திட எனக்கருள்வாய்