கேசவா மாதவா…..
பல்லவி
கேசவ மாதவ கோவிந்தா் என்றழைத்து
ஆசையுடனுனைத் துதித்துப் போற்றினேன்
அனுபல்லவி
ஈசனும் பிரமனும் போற்றி வணங்கிடும்
பேசும் தெய்வமே கலியுக க்கடவுளே
சரணம்
காசினியோர் கொண்டாடும் மாசிலாமணியே
கேசியெனும் குதிரை முக அரக்கனைக்கொன்றவனே
பாசத்தளைகளைக் களைந்திடும் பரந்தாமனே
வாச மலர் தூவியுன் மலர்ப்பதம் பணிந்து