ஶ்ரீராம எனறழைத்து…..
பல்லவி
ஶ்ரீராமா என்றழைத்து உனையே துதித்தேன்
நீயே கலியகத்தில் கண்கண்ட தெய்வம்
அனுபல்லவி
நாராயணன் மாதவன் கேசவனென்று
ஓராயிரம் பெயர் உனக்கிருந்தாலும்
சரணம்
தீரா வினை தீர்க்கும் தினகரகுலத்தோனே
காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த
மாராபி ராமனே மன்னு பரந்தாமனே
பாராளும் வேந்தனே பரமபத நாதனே