Sunday, 9 August 2026

மயிலை வளர்…..



              மயிலை வளர்…..


                      பல்லவி


     மயிலை வளர் கற்பகமே அற்புதமே

     கயிலைநாதன் கபாலீசன் மனம் விரும்பும்


                     அனுபல்லவி 


     மயில் வாகனன் நர்த்தன கணபதி போற்றும்

     தையலே உமையே கேசவன் சோதரி


                        சரணம்


    இயலிசை நாட்டிய நாடகம் ரசித்திடும்

    ஒயிலே சயிலேந்திரன் பெற்ற மாதவமே

    உயிருடல் தந்து எனைக்காக்கும் அன்னையே

    நோயம் பவக்கடல் கடந்திட எனக்கருள்வாய்

கண்டிக்கதிர்காம……

 


                        கண்டிக்கதிர்காம……

                                      பல்லவி

                   கண்டிக்கதிர்காமக் கந்தனைத்துதித்தேன்

                    பெண்டிர் வள்ளி தேவானை மணாளனை

                                   அனுபல்லவி 

                    கண்ணன் கேசவன் மருகனை முருகனை

                     எண் திசையும் போற்றும் முத்துக்குமரனை

                                         சரணம்

                      கண்கவர் அழகனைக் கார்த்திகேயனை

                       விண்ணோரும் மண்ணோரும் போற்றும் சிவகுமாரனை

                       தண்மதி முகத்தோனை சிங்காரவேலனை

                       பண்ணிசைத்து வணங்கி தாள் பணிந்து



                       

   





Saturday, 8 August 2026

கோவிந்தனை நினை மனமே…….

 


                     கோவிந்தனை நினை மனமே…….

                            பல்லவி 

                 கோவிந்தனை நினை மனமே

                 மூவாசைப்பிணி போக்கும் முன்வினை பயன் நீக்கும்

                              அனுபல்லவி

                  தேவாதிதேவனைக் கேசவனை மாதவனை

                   நாவாரப்பாடி மனமாரத்துதித்து

                                  சரணம்

                   ஆவினங்கள் மேய்க்கும் கண்ணனை அச்சுதனை

                   தேவருக்கமுதளித்த திருமாலை  முகுந்தனை

                   மூவருக்கும் முதல்வனை முழுமுற்கடவுளை

                   காவாயென வேண்டி கரம் கூப்பி வணங்கி 



                    

                   

                    

                      

                           

Friday, 7 August 2026

எழில் கொண்ட…..




 “பாடல் கண்டேன் பாடல் புனைந்தேன்”


           எழில் கொண்ட…..


                   பல்லவி

எழில் கொண்ட உன்னியவன் பதம் காண

விழைந்ததன்றி வேறெதுவும் வேண்டேன்

                அனுபல்லவி 

 குழலேந்திய குருவாயுரப்பனைக்கேசவனை

 மழலையில் வெண்ணையுண்ட வாயனை

                   சரணம்

சுழல் சக்கரமேந்திய ஶ்ரீமன் நாராயணனை

ஆழியில் கிடந்துறங்கும் கேசவனை மாதவனை

அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் பிரமனும்

தொழும் வண்ணம் பிரதாபமுடையவனை

                    *****

சோதியுடற் சார்த்திய தூவெண்ணெய் நாற்றமுடன் 

பாதவெழில் காணப் பரிதவிக்கும் பக்தியுடன்

ஊதுகுழ  லேந்திய  உன்னியவன் சந்நிதியில் 

ஏதெனக்கு வேண்டுவேன் சொல்?**

 

 **  வரைபடம் கவிதை ‘வித்யாசுப்பிரமணியம்’

Tuesday, 30 June 2026

கால நேரம்……

 



                            கால நேரம்……

                                      பல்லவி

              கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்

              மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்

                                   அனுபல்லவி

                நீலவண்ணன் நீயே பாலகோபலனே

                ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே

                                      சரணம்

                சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட

                 பாலராமனே ஜானகி லோலனே

                 கோலமயில் பீலி கொண்டையில் சூடிய

                 பாலகோபாலனே நவநீதக்கண்ணனே

                    





Saturday, 27 June 2026

எப்படி பாடினால்……




                   எப்படி பாடினால்……


                             பல்லவி

         எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்

         அப்படி பாடுகிறேன்  சென்ன கேசவா

                           அனுபல்லவி

          அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்

          முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல் 

                                சரணம்

            எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி

            தப்பேதும் நான் செய்தவனில்லை

             அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்

             ஒப்பிலா அப்பனே  நாராயணனே