Saturday, 8 August 2026

கோவிந்தனை நினை மனமே…….

 


                     கோவிந்தனை நினை மனமே…….

                            பல்லவி 

                 கோவிந்தனை நினை மனமே

                 மூவாசைப்பிணி போக்கும் முன்வினை பயன் நீக்கும்

                              அனுபல்லவி

                  தேவாதிதேவனைக் கேசவனை மாதவனை

                   நாவாரப்பாடி மனமாரத்துதித்து

                                  சரணம்

                   ஆவினங்கள் மேய்க்கும் கண்ணனை அச்சுதனை

                   தேவருக்கமுதளித்த திருமாலை  முகுந்தனை

                   மூவருக்கும் முதல்வனை முழுமுற்கடவுளை

                   காவாயென வேண்டி கரம் கூப்பி வணங்கி 



                    

                   

                    

                      

                           

Friday, 7 August 2026

எழில் கொண்ட…..




 “பாடல் கண்டேன் பாடல் புனைந்தேன்”


           எழில் கொண்ட…..


                   பல்லவி

எழில் கொண்ட உன்னியவன் பதம் காண

விழைந்ததன்றி வேறெதுவும் வேண்டேன்

                அனுபல்லவி 

 குழலேந்திய குருவாயுரப்பனைக்கேசவனை

 மழலையில் வெண்ணையுண்ட வாயனை

                   சரணம்

சுழல் சக்கரமேந்திய ஶ்ரீமன் நாராயணனை

ஆழியில் கிடந்துறங்கும் கேசவனை மாதவனை

அழலேந்தும் நெற்றிக் கண்ணனும் பிரமனும்

தொழும் வண்ணம் பிரதாபமுடையவனை

                    *****

சோதியுடற் சார்த்திய தூவெண்ணெய் நாற்றமுடன் 

பாதவெழில் காணப் பரிதவிக்கும் பக்தியுடன்

ஊதுகுழ  லேந்திய  உன்னியவன் சந்நிதியில் 

ஏதெனக்கு வேண்டுவேன் சொல்?**

 

 **  வரைபடம் கவிதை ‘வித்யாசுப்பிரமணியம்’

Tuesday, 30 June 2026

கால நேரம்……

 



                            கால நேரம்……

                                      பல்லவி

              கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்

              மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்

                                   அனுபல்லவி

                நீலவண்ணன் நீயே பாலகோபலனே

                ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே

                                      சரணம்

                சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட

                 பாலராமனே ஜானகி லோலனே

                 கோலமயில் பீலி கொண்டையில் சூடிய

                 பாலகோபாலனே நவநீதக்கண்ணனே

                    





Saturday, 27 June 2026

எப்படி பாடினால்……




                   எப்படி பாடினால்……


                             பல்லவி

         எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்

         அப்படி பாடுகிறேன்  சென்ன கேசவா

                           அனுபல்லவி

          அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்

          முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல் 

                                சரணம்

            எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி

            தப்பேதும் நான் செய்தவனில்லை

             அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்

             ஒப்பிலா அப்பனே  நாராயணனே

             

             

             

   



Monday, 20 April 2026

பாரில் உனையன்றி….

 


          பாரில் உனையன்றி….


                        பல்லவி


 பாரில் உனையன்றி தாயே  பராசக்தி

 வேறு யார் துணையெனக்கு  பராசக்தி


                    அனுபல்லவி


நேரில் நின்றுனைத்துதித்தேன் பராசக்தி

கோரிக்கை ஏற்றிடுவாய் தாயே பராசக்தி


                      சரணம்


 மாரியே பராசக்தி மகிடனை 

     வதைத்தவளே

 சேரிடமறியாமல் சேர்ந்து தீச்செயல் பல 

   புரிந்தேன்

 ஆறுதல் தந்தெனையே ஆண்டருள்வாய்  

     தாயே

  யாருக்கும் தீமை செய்யா வாழ்வெனக் 

    கருள்வாயே


 

 கற்ற கல்வி பெற்ற செல்வம் எதுவும் 

     சதமல்ல

 சுற்றம் சுகமெல்லாம் துறந்து உன்னைச்

 சரணடைந்தேன்

 பற்றற்ற நிலை பெறவே தாயே பராசக்தி

 உற்ற துணை நீயே சென்னகேசவன் 

     சோதரியே

                          *****


 दाशवदनाय विद्महे

ज्वामाळायाई धीमही

तन्नो परशक्ति प्रचोदयात्  


 ாம் பத்துத் திசைகளிலும் இருப்பவளை அறிந்துகொள்வோம்.

ஒளிரும் மாலை அணிந்தவளைத் தியானிப்போம்.

அந்தப் பராசக்தி எங்கள் புத்தியை/அறிவை ஒளிரச் செய்யட்டும்.

Sunday, 19 April 2026

காமாக்ஷி….

 


               காமாக்ஷி….


                       பல்லவி


காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்

பாமரர் கொண்டாடும் ஜொன்னவாடா தலத்துறை


                    அனுபல்லவி


மாமாயன் கேசவன் மனம் விரும்பும் சோதரி

மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி


                     சரணம்


 நாமங்களாயிரமுடைய நாராயணி

 நாமகள் பூமகள்  சாமரம் வீசும்

 கோமகளே ஶ்ரீராஜராஜேச்வரி

 பூமண்டலம் போற்றும் புவனேச்வரி


ஓமெனும் மந்திரத்தினுட்பொருள் நீயே

காமனுக்கருள் செய்த காமேச்வரியே

தேமதுரத் தமிழாலுனைப் போற்றிப்பாடி

தூமலர் தூவியுன் மலரடி பணிந்து


                                  ஜொன்னாவாடா காமாக்ஷி 


ஜொன்னாவாடா காமாக்ஷி மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் ஜொன்னவாடாவில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இக்கூட்டத்தில் நெல்லூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆலயம் பெண்ணாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது 1150 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காமாட்சி தேவி சக்தியின் அவதாரமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரால் இங்கு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டது. நவ ஆவரண பூஜையும், ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமிக்கும், ஸ்ரீ காமாக்ஷி தாயிக்கும் தினமும் கல்யாணோற்சவம் நடைபெறும். தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சக்கரம் பிரம்மோத்ஸவம் தெலுங்கு மாதத்தின் வைசாக மாசத்தில் நிகழ்த்தப்பட்டது மற்றும் தசரா விழாவின் ஒன்பது நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது 1150 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.