KESAVAN KEERTHANAIKAL
KESAVAN ISAIPAATALKAL
Monday, 3 August 2026
Tuesday, 30 June 2026
கால நேரம்……
கால நேரம்……
பல்லவி
கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்
மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
நீலவண்ணன் நீயே பாலகோபலனே
ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே
சரணம்
சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட
பாலராமனே ஜானகி லோலனே
கோலமயில் பீலி கொண்டையில் சூடிய
பாலகோபாலனே நவநீதக்கண்ணனே
Saturday, 27 June 2026
எப்படி பாடினால்……
எப்படி பாடினால்……
பல்லவி
எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்
அப்படி பாடுகிறேன் சென்ன கேசவா
அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல்
சரணம்
எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி
தப்பேதும் நான் செய்தவனில்லை
அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்
ஒப்பிலா அப்பனே நாராயணனே
Monday, 20 April 2026
பாரில் உனையன்றி….
பாரில் உனையன்றி….
பல்லவி
பாரில் உனையன்றி தாயே பராசக்தி
வேறு யார் துணையெனக்கு பராசக்தி
அனுபல்லவி
நேரில் நின்றுனைத்துதித்தேன் பராசக்தி
கோரிக்கை ஏற்றிடுவாய் தாயே பராசக்தி
சரணம்
மாரியே பராசக்தி மகிடனை
வதைத்தவளே
சேரிடமறியாமல் சேர்ந்து தீச்செயல் பல
புரிந்தேன்
ஆறுதல் தந்தெனையே ஆண்டருள்வாய்
தாயே
யாருக்கும் தீமை செய்யா வாழ்வெனக்
கருள்வாயே
கற்ற கல்வி பெற்ற செல்வம் எதுவும்
சதமல்ல
சுற்றம் சுகமெல்லாம் துறந்து உன்னைச்
சரணடைந்தேன்
பற்றற்ற நிலை பெறவே தாயே பராசக்தி
உற்ற துணை நீயே சென்னகேசவன்
சோதரியே
*****
ॐ दाशवदनाय विद्महे
ज्वामाळायाई धीमही
तन्नो परशक्ति प्रचोदयात् ॥
நாம் பத்துத் திசைகளிலும் இருப்பவளை அறிந்துகொள்வோம்.
ஒளிரும் மாலை அணிந்தவளைத் தியானிப்போம்.
அந்தப் பராசக்தி எங்கள் புத்தியை/அறிவை ஒளிரச் செய்யட்டும்.
Sunday, 19 April 2026
காமாக்ஷி….
காமாக்ஷி….
பல்லவி
காமாக்ஷி தேவி உனையே துதித்தேன்
பாமரர் கொண்டாடும் ஜொன்னவாடா தலத்துறை
அனுபல்லவி
மாமாயன் கேசவன் மனம் விரும்பும் சோதரி
மாமறைகள் போற்றும் திரிபுரசுந்தரி
சரணம்
நாமங்களாயிரமுடைய நாராயணி
நாமகள் பூமகள் சாமரம் வீசும்
கோமகளே ஶ்ரீராஜராஜேச்வரி
பூமண்டலம் போற்றும் புவனேச்வரி
ஓமெனும் மந்திரத்தினுட்பொருள் நீயே
காமனுக்கருள் செய்த காமேச்வரியே
தேமதுரத் தமிழாலுனைப் போற்றிப்பாடி
தூமலர் தூவியுன் மலரடி பணிந்து
ஜொன்னாவாடா காமாக்ஷி
ஜொன்னாவாடா காமாக்ஷி மற்றும் ஸ்ரீ மல்லிகார்ஜுன ஸ்வாமி கோவில் ஜொன்னவாடாவில் உள்ள ஒரு பழமையான கோவிலாகும். இக்கூட்டத்தில் நெல்லூரில் இருந்து 23 கி.மீ தொலைவில் உள்ள இந்த ஆலயம் பெண்ணாற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது. இது 1150 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. காமாட்சி தேவி சக்தியின் அவதாரமாக நம்பப்படுகிறது. ஸ்ரீ ஜகத்குரு ஆதி சங்கராச்சாரியாரால் இங்கு ஸ்ரீ சக்கரம் நிறுவப்பட்டது. நவ ஆவரண பூஜையும், ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமிக்கும், ஸ்ரீ காமாக்ஷி தாயிக்கும் தினமும் கல்யாணோற்சவம் நடைபெறும். தினமும் மதியம் அன்னதானம் வழங்கப்படும். ஸ்ரீ ஆதி சங்கராச்சாரியார் ஸ்ரீ சக்கரம் பிரம்மோத்ஸவம் தெலுங்கு மாதத்தின் வைசாக மாசத்தில் நிகழ்த்தப்பட்டது மற்றும் தசரா விழாவின் ஒன்பது நாட்கள் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இது 1150 ஆம் ஆண்டில் கட்டப்பட்டது.
Tuesday, 14 April 2026
ஶ்ரீராம எனறழைத்து…..
ஶ்ரீராம எனறழைத்து…..
பல்லவி
ஶ்ரீராமா என்றழைத்து உனையே துதித்தேன்
நீயே கலியகத்தில் கண்கண்ட தெய்வம்
அனுபல்லவி
நாராயணன் மாதவன் கேசவனென்று
ஓராயிரம் பெயர் உனக்கிருந்தாலும்
சரணம்
தீரா வினை தீர்க்கும் தினகரகுலத்தோனே
காரார் குழலாள் ஜானகியின் கரம் பிடித்த
மாராபி ராமனே மன்னு பரந்தாமனே
பாராளும் வேந்தனே பரமபத நாதனே
Monday, 13 April 2026
கேசவா மாதவா…..
கேசவா மாதவா…..
பல்லவி
கேசவ மாதவ கோவிந்தா் என்றழைத்து
ஆசையுடனுனைத் துதித்துப் போற்றினேன்
அனுபல்லவி
ஈசனும் பிரமனும் போற்றி வணங்கிடும்
பேசும் தெய்வமே கலியுக க்கடவுளே
சரணம்
காசினியோர் கொண்டாடும் மாசிலாமணியே
கேசியெனும் குதிரை முக அரக்கனைக்கொன்றவனே
பாசத்தளைகளைக் களைந்திடும் பரந்தாமனே
வாச மலர் தூவியுன் மலர்ப்பதம் பணிந்து