Saturday, 15 August 2026

யாரென்ன சொன்னாலும்…..

 



           யாரென்ன சொன்னாலும்…..

                 

                                   பல்லவி


     யாரென்ன சொன்னாலும் உனைப்போற்றிப்பாடுவேன்

     பாரெங்கும் புகழ் விளங்கும் சென்னகேசவப்பெருமாளே


                     அனுபல்லவி 


     கார்வண்ணமேனியனே கமலக்கண்ணனே

      நீர்மலைமேல் நின்றருளும் நீர்வண்ணப்பெருமாளே

                        சரணம்

     ஆர்பரிக்கும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே

     தேர் நடத்தி ப்பார்த்தனுக்கு துணை நின்ற சாரதியே

     மார்பணியாய்த் திருமகளை வைத்திருக்கும் மாதவனே

     ஊர்தியாய்க்கருடனை வைத்திருக்கும் திருமாலே



      

      

        

     





No comments:

Post a Comment