கால நேரம்……
பல்லவி
கால நேரம் பாராமல் உனைத்துதித்தேன்
மாலனே மாலோலனே எனக்கருள் புரிவாய்
அனுபல்லவி
நீலவண்ணன் நீயே பாலகோபலனே
ஆலிலையில் துயிலும் கேசவனே மாதவனே
சரணம்
சாலச்சிறந்த அயோத்தியில் கோயில் கொண்ட
பாலராமனே ஜானகி லோலனே
கோலமயில் பீலி கொண்டையில் சூடிய
பாலகோபாலனே நவநீதக்கண்ணனே
No comments:
Post a Comment