எப்படி பாடினால்……
பல்லவி
எப்படிப் பாடினால் உன்னருள் கிடைக்கும்
அப்படி பாடுகிறேன் சென்ன கேசவா
அனுபல்லவி
அப்பரும் சுந்தரரும் ஆளுடைப்பிள்ளையும்
முப்போதும் உனைப் பாடும் பாக்கியம் பெற்றது போல்
சரணம்
எப்போதும் உன்னைத் துதிப்பதன்றி
தப்பேதும் நான் செய்தவனில்லை
அப்போதைக்கிப்போதே வேண்டுகின்றேன்
ஒப்பிலா அப்பனே நாராயணனே
No comments:
Post a Comment