உத்தமனே ஶ்ரீராமா…..
பல்லவி
உத்தமனே ஶ்ரீராமா உனைக்கூவியழைத்தேனே
சத்தமுன் காதில் விழவில்லையா கேசவனே
அனுபல்லவி
பித்தன் சிவன் போற்றிய நாமமுடையவனை
கத்தும் கடல் நடுவே கிடந்துறங்கும் நாராயணனே
சரணம்
எத்தனையோ ஜென்மங்களாய் செய்த பாவங்கள்
அத்தனையும் சேர்ந்தெனை வாட்டுதே
மொத்தமும் தொலையவே உனைத் துதித்தேன்
மெத்தனேனய்யா ஶ்ரீராமா உனக்கு
No comments:
Post a Comment