அக்காரக்கனியை…..
பல்லவி
அக்காரக்கனியை நரசிம்மனைத்துதித்தேன்
எக்காலத்திலுமெனைக் காக்கும் கேசவனை
அனுபல்லவி
செக்கச்சிவந்த கண்ணுடைய செங்கண்ணனை
சக்கரக்கையனை சர்வலோகநாயகனை
சரணம்
உக்கிர மூர்த்தியே ஆனாலுமவன்
பக்தருக்கருளும் பரமதயாளன்
திக்கெட்டும் புகழ் விளங்கும் திருமால் கோவிந்தன்
மக்கள் கொண்டாடும் மாலோலன் நாராயணன்
No comments:
Post a Comment