நமச்சிவாயயென…..
பல்லவி
நமச்சிவாயயென நாவாரத்துதித்தேன் - ஓம்
துரிதம்
அமரரும் முனிவரும் கணங்களும் நந்தியும்
அமரேந்திரனும் வணங்கிடும் சிவனை
அனுபல்லவி
சமமென தனக்கருவரில்லாத ஈசனை
ஆமருவியப்பனெனும் கேசவன் நேசனை
சரணம்
இமவான் மகளை மணந்தவனை பசுபதியை
உமா மகேச்வரனை சொக்கநாதனை
சோமசுந்தரனை ஆலவாயழகனை
சாம முதல் வேதங்கள் போற்றும் சங்கரனை
காமனையெரித்தவனை கங்காதரனை
மமதையில் திளைத்த திரிபுரனை வதைத்தவனை
குமரனைப் படைத்தவனை நெற்றிக்கண்ணனை
எமனைக் காலாலுதைத்த காலகாலனை
No comments:
Post a Comment