Monday, 12 January 2026

வினைப்பயனால்…..

 


  வினைப்பயனால்…..


                     பல்லவி


வினைப்பயனால் கட்டுண்ட என் மனத்துள்

உனையறியும் ஆவல் கொண்டேன் 

கேசவனே


                   அனுபல்லவி


 சுனை நீராய்க் கருணை வெள்ளம்    

     சுரக்கும்

 இனியவனே  ஶ்ரீமன் நாராயணனே


                        சரணம்


 நினைக்கும் காணும் நீரும் மரமும்

 அனைத்தும் மாயையென உரைக்கக் 

     கேட்டேன்

 தனையறிந்தால் தன்னுளே 

      எனையறிந்தால்

 உனையறியலாம் என்றுணர்ந்தேன்

   பரம்பொருளே

No comments:

Post a Comment