மீண்டுமாதி கேசவனை….
பல்லவி
மீண்டுமாதி கேசவனைப் போற்றித்துதித்தேன்
ஆண்டவன் அவனே என்றுணர்ந்து நான்
அனுபல்லவி
பாண்டவர் நேயனை பக்த சகாயனை
தீண்டும் அரவின் மேல் பள்ளி கொண்ட மாதவனை
சரணம்
காண்டவ வனமெரித்த நர நாராயணனை
வேண்டுவோர் வேண்டும் வரம் தரும் கண்ணனை
ஆண்டாள் நேசனை அரங்கநாதனை
மாண்டபின் இனி பிறந்திடாதிருந்திட
No comments:
Post a Comment