ஶ்ரீமஹாராஞ்ஞி ஸ்தவம் :
சராசரஜக³த்ஸ்ருʼஷ்டிஸ்தி²திஸம்ஹ்ருʼதிகாரிணி ।
நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம்
" அசையும் அசையாப் பொருட்கள் நிரம்பிய ப்ரபஞ்சத்தை உண்டாக்கி, காத்து அழிக்கும் பராசக்தியும், மஹாராஞ்ஞியுமான தாயே!! நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"
ப்³ரஹ்மவிஷ்ணுமஹேஶாநவந்தி³தே கி³ரிநந்தி³நி ।
நமோঽஸ்து தே மஹாராஜ்ஞி பாஹி மாம் ஶரணாக³தம் ॥
"ப்ரஹ்மா விஷ்ணு மஹேச்வரர்களால் ஸதா வந்திக்கப்பட்டவளும், மலையரசனின் மகளுமான ஶ்ரீபார்வதி தேவியே!! ஶ்ரீமஹாராஞ்ஞியே!! தாயே!! உனக்கு நமஸ்காரங்கள்!! உன் பாதமே சரணாகதம்!!"
உன் பாதமே……
பல்லவி
உன் பாதமே சரணடைந்தேன் உமா தேவி
என்னைக் காத்தருள வேண்டுமென வேண்டி
அனுபல்லவி
சென்ன கேசவன் சோதரியே பார்வதியே
அன்னபூரணியே மலையரசன் மகளே
சரணம்
சுராசுரரும் சுகசனகாதியரும்
அரனயனரியும் பணி திரிபுரசுந்தரியே
சராசரமனைத்தும் படைத்து காத்தழிக்கும்
பராபரையே பரமேச்வரியே
No comments:
Post a Comment