கால நேரம் பாராமல்…..
பல்லவி
காலநேரம் பாராமல் உனையே துதித்தேன்
மாலனே கேசவனே ஶ்ரீமன் நாராயணனே
அனுபல்லவி
ஞாலமுண்டவாயனே. ஶ்ரீவாசுதேவனே
ஆலிலை மேல் துயின்ற வடபத்ர சாயியே
சரணம்
காலகாலனும் பிரமனும் பணியும்
மாலோலன் நரசிம்மனும் நீயே
சாலச்சிறந்த அயோத்தியில் குடிகொண்ட
பாலராமனே ஜானகி லோலனே
No comments:
Post a Comment