இம்மாநிலம் கொண்டாடும்…
பல்லவி
இம்மாநிலம் கொண்டாடும் ஶ்ரீலிதாம்பிகையே
சும்மாயிருக்கும் போதும் அம்மா உனைத் துதித்தேன்
அனுபல்லவி
பெம்மான் சிவனிடம் கொண்ட பரமேச்வரியே
அம்மான் கேசவன் அன்பு சோதரியே
சரணம்
சிம்மாசனத்தில் வீற்றிருக்கும் தாயே மீனாக்ஷி
இம்மாயத்தரணியை ஆள்பவள் நீயே
எம்மாத்திரம் உனக்கு ஏழையேனெனக்கருள
வெம்பவக் கடல் கடக்க நீயேயென் துணை
No comments:
Post a Comment