ஏனிந்த சோதனையை…😭😭
பல்லவி
ஏனிந்த சோதனையை எனக்களித்தாய்
தேனே கேசவனே திகட்டாத தெள்ளமுதே
அனுபல்லவி
வானவரும் தானவரும் சுகசனகாதியரும்
ஏனையோனைவரும் வணங்கும் பரம்பொருளே
சரணம்
தேனுகாசுரனை வதைத்தவன் சோதரனே
பானுவைத்திங்களை கண்களாயுடையவனே
ஊனுயிரனைத்தும் நீயென்றே நினைத்தேன்
போனெனும் கைபேசி தனை இழக்கச்செய்து
No comments:
Post a Comment