Wednesday, 26 March 2014
கபாலீசன்
கபாலீசன்
பல்லவி
பார்வதி பதியை பரமேச்வரனை
மகாதேவனை மனமாரத்துதித்தேன்
துரிதம்
நீரும் நெருப்பும் நிலமும் காற்றும்
அனுபல்லவி
கார்வண்ண மேனியன் கேசவன் நேசனை
பார் போற்றும் ஈசனை வார்சடையோனை
சரணம்
காரமர் மேனியன் கணபதியும் முருகனும்
நாரணனும் நான்முகனும் தேவரும் முனிவரும்
சூரியனும் சந்திரனும் நந்தியும் கணங்களும்
நேர் நின்று வணங்கிடும் கபாலீசனை
.
ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
ஸ்ரீவித்யா ராஜகோபாலன்
பல்லவி
ஸ்ரீ வித்யா ராஜகோபாலனை
மன்னார் குடித்தலத்தில் மனமாரத்துதித்தேன்
அனுபல்லவி
ஆவினங்கள் மேய்ப்பவனை அநாதநாதனை
பூவிதழ்கள் தூவி மலர்ப்பதம் பணிந்து
சரணம்
தேவி செங்கமலம் மனங்கவர் நாயகனை
தேவரும் முனிவரும் நாரதரும் நான்முகனும்
மாவிடைவாகனனும் கருடனுமிந்திரனும்
யாவரும் பணிந்தேத்தும் தேவாதி தேவனை
Tuesday, 25 March 2014
கேசவன் நாமசங்கீர்த்தனம்
கேசவன் நாமசங்கீர்த்தனம்
பல்லவி
கேசவன் நாமமே கேட்கவே பேரின்பம்
ஆசையுடன் துதித்து பாசமுடன் பாடும்
அனுபல்லவி
நீசருக்குமருள் தரும் நேசமுடையவன்
ஈசன் சிவபெருமான் பூசிக்கும் பதத்தினன்
சரணம்
ஆசாபாசத் தளைகளைக் களைந்திடும்
மோசமான எண்ணங்கள் போக்கிடும்
தேசுடன் திகழும் லாவண்யமளித்திடும்
பேசும் தெய்வம் கலியுக வரதன்
துதிக்கையன்
துதிக்கையன்
பல்லவி
மதியணிந்தவனை மதவாரணனை
துதிக்கையனை கதியெனத்துதித்தேன்
அனுபல்லவி
கதிரொளியையும்விட ஒளிபடைத்தவனை
பதுமநாபன் கேசவன் மருகனை
சரணம்
முதன் முதலனைவரும் வணங்கிடும் தேவனை
மதுரம் நிறைந்த மோதகப்பிரியனை
எதிரிடுமிடர்களை விலக்கிடும் கரிமுகனை
விதியையும் மாற்றும் வலியுடையவனை
துரிதம்
நந்தியும் கணங்களும் நரர்சுரர் முனிவரும்
இந்த்ரனும் பிரமனும் கரம் பணிந்தேத்தும்
Monday, 24 March 2014
Subscribe to:
Posts (Atom)












