Wednesday, 2 April 2014

கற்பக நாதன்

                           .

கற்பக நாதன் 

பல்லவி 

திருமயிலை சிவனை கபாலீச்வரனை 

ஒருமையுடன் நினைந்து மனமாரத்துதித்தேன் 

அனுபல்லவி 

திருவிளையாடல்கள் பல புரிந்தவனை 

கற்பக நாதனை கேசவன் நேசனை 

சரணம் 

பெரும்பிணி பவபயம் களைந்திடுமீசனை  

கருணாகரனை காலகாலனை 

நெருப்பினை நெற்றியில் வைத்திருப்பவனை 

எருது வாகனனை புரமெரித்தவனை         








கறை நல்லது !!



       கறை நல்லது !!


              மேனி கறை பட்டாலும்

              உள்ளம் கறை படாத

              தெள்ளததெளிவான

               கள்ளச்சிரிபுடனே

              கொள்ளையன்பு கொண்ட

              பிள்ளை யுள்ளங்களில்

              கண்டேன்  என் அன்புக்

              கண்ணனையும் ஏசுவையும் !!
             

              

மறத்தமிழன்



  மறத்தமிழன்


  நானுமோர் மறத்தமிழனே !

     ராஜபக்சேயின் நண்பனல்ல;

     நியாயங்கள் தெளிவாக

      நாளாகலாம்   காத்திருப்போம்

 கடவுள் வழங்கும் தண்டனைகள் நம் கண்ணுக்குப்புலப்படவேண்டுமெனக்

கட்டாயமில்லை ! ஆங்காரப்பேச்சுக்களா ல்  லாபமில்லை !

ஆக்கபூர்வமாகஏதாவது செய்வோம் ; துணை வாருங்கள்!


  .தமிழ் எனது உயிர் மூச்சு

    அதை நான் பிறார் மீது விடுவதில்லை !


       தமிழனென்று சொல்லடா
       
        தலைநிமிர்ந்து நில்லடா !

        இது எனது அன்புக்கவியின் அறைகூவல்!


      

Tuesday, 1 April 2014

ஆதிவிநாயகன்


                                                     ஆதிவிநாயகன்

                                                      பல்லவி

                             மனம் களிக்கச் செய்யும் மகாகணபதியை

                              மதிசேகரன் மகனை மனமாரத்துதிதேன்

                                                      அனுபல்லவி

                               தினகரகுலத்தோன்  கேசவன் மருகனை

                               வினைகளையகற்றிடும் வேழமுகத்தோனை

                                                        சரணம்

                                வினயமுடன் பணியும் அடியவர்க்கெல்லாம்

                                அனைத்துமளித்திடும் ஆனைமுகத்தோனை

                                  தனக்கு சரிநிகரில்லாத  தேவனை

                                   அனைத்துக்கும் முதலான ஆதிவினாயகனை                                   

                                 முனிவரும் தேவரும் கணங்களும் நந்தியும்

                                 சனிமுதல்  கோள்களும் பிரமனும் வணங்கிடும்

                                 இனிய சங்கீத நாட்டிய ரசிகனை

                                  கனிவுடனெனையே ஆண்டருள வேண்டுமென









  

கண்ணனும் ஏசுவும்



கண்ணனும் ஏசுவும்

 வண்ண வண்ண பூக்கள்
கண்ணைப்பறிக்கும் அழகு
எண்ணங்களில் கள்ளம்
கருப்பு வெள்ளை பேதம்
எதுவமில்லை இங்கு
கண்ணனும் ஏசுவும் கை
கோர்த்து நிற்கும் அழகு
விண்ணும் மண்ணும்  காண
வியப்பூட்டும்  அழகு
சிறகடித்து ப்பறக்க
காத்திருக்கும் அழகு

பூக்களைப்பறிக்காதீர்


பூக்களைப்பறிக்காதீர் 



தோட்டத்துப் பூக்கள் 

பார்த்து மகிழ மட்டும் 

பறிப்பதர்க்கல்ல 

புரிந்து கொண்டேன் 

உன்னைப்பார்த்து 



ஸ்ரீ பெரிய நாயக கணபதி




                                       .
                                          .


ஸ்ரீ பெரிய நாயக கணபதி 


பல்லவி 

அகவல் பாடிய ஔவைக்கருளிய 

ஸ்ரீ பெரியநாயக கணபதியைப்பணிந்தேன் 


அனுபல்லவி  

சகமெலாம் புகழும் கேசவன் மருகனை 

பகலவனைவிட ஒளிதரும் கரிமுகனை 

சரணம் 

இகபரமிரண்டிலும்  சுகமளிப்பவனை 

அகிலம் காக்கும் ஆனைமுகத்தோனை 

சகலரும் வணங்கிடும் சங்கரி மைந்தனை 

புகழ்மிகு கோவலூர் திருத்தலத்தில் காட்சி தரும்