பார் போற்றும் …….
பல்லவி
பார் போற்றும் பார்த்தசாரதியைக் கேசவனை
தேரோட்டியின் புகழைப் பாடித் துதித்தேன்
அனுபல்லவி
கார்வண்ணமேனியனைக் கடல் வண்ணக்கண்ணனை
நீர்மலைமேல் நின்றருளும் நீர்வண்ணப்பெருமாளை
சரணம்
ஆர்பரித்தெழந்த கௌரவப்படை வீழும் வண்ணம்
தேர் நடத்திப் பார்த்தனுக்கு துணை நின்ற சாரதியை
ஊர் புகழுமுத்தமனை உலகளந்த பெருமாளை
கீர்த்திமிகு ஶ்ரீமன் நாராயணனைத் திருமாலை
No comments:
Post a Comment