நாராயணாவென்றழைத்த……
பல்லவி
நாராயணாவென்றழைத்த அஜாமிளனுக்கு
பேராதரவளித்த கேசவப்பெருமாளே
அனுபல்லவி
ஓராயிரம் நாமமோதியழைத்துமெனை
பாராமலிருப்பதும் முறையாமோ சொல்
சரணம்
ஆராவமுதனே சாரங்கபாணியே
காரார் குழலாள் கோமளவல்லி நாதனே
தீராவினை தீர்க்கும் திருவரங்கத்தம்மானே
பாரோர் போற்றும் திருவேங்கடமுடையோனே
No comments:
Post a Comment