என்னில் அவனுமுண்டு….
பல்லவி
என்னில் அவனுமுண்டு அவனுள் நானுமுண்டு
தன்னுள் அவனைக்கண்டு தணிந்த தென் நெஞ்சம்
அனுபல்லவி
முன்னின்று துதித்தேனந்தக் கேசவனை நானும்
என்னுளவன் இருப்பதறியா நாட்களிலே
சரணம்
மன்னுபுகழ் கோசலையின் மணிவயிற்றிலுதித்தவன்
தென்னிலங்கையரக்கன் தலை சிந்துவித்ததவனே
கன்னி நன் மா மதில் புடை சூழ் கணபுரத்து கருமணி
இன்னும் பல புகழுடைய இன்னமுதவனே தான்
*****
No comments:
Post a Comment