கடல் நடுவே……
பல்லவி
கடல் நடுவே கிடந்துறங்கும் கேசவனே உனைத்துதிதேன்
விடமுண்ட கண்டனும் பிரமுனும் வணங்கிடும்
அனுபல்லவி
மட நெஞ்சமே மாலவன் பாதமே உன் கதி
நடந்தும் நின்றும் அமர்ந்தும் காட்சி தரும்
சரணம்
உடலே ஆலயம் உள்ளமே கடவுள்
கிடந்துறங்கும் பட அரவே குண்டலினி
அடங்காத புலன்களே நமையாட்டுவிக்கும்
அடவியில் உலவிடும் விலங்குகளென அறிந்து