தாயே இனியுமென்னை….
பல்லவி
தாயே இனியுமென்னை சோதிக்கலாகது
மாயே மரகதமே கேசவன் சோதரி
அனுபல்லவி
நீயே சகல உலகனைத்தும் படைத்தும் காத்தும்
ஓயாது அலகிலா விளையாடல் புரியும் ஈச்வரி
சரணம்
தூயவளே துயர் துடைப்பவளே பரமேச்வரி
சேயெனைக்காப்பதுன் கடனன்றோ
வேய்முத்தநாதன் ஒருபாகத்தமர்ந்தவளே
நோயாம் பவப்பிணி தீர நீயேயென் துணை