Friday, 26 September 2025

மங்களாம்பிகையே…..

 


                            மங்களாம்பிகையே…..


                                                பல்லவி

         மங்களாம்பிகையே மகிஷாசுரமர்த்தினி

         திங்கள் பிறையணிந்த உனையே துதித்தேன்

                      அனுபல்லவி

         சங்கரன் அகச்தீச்வரனுடனுறை ஈச்வரி

         சங்கரி சென்ன கேசவன் சோதரி

                         சரணம்

         பங்கஜவல்லி பரமக்ருபாகரி

         குங்குமக்காரி குமாரஜனனி

         சிங்காரி ஒய்யாரி சிவகாமசுந்தரி

         நங்கையர் போற்றும் ராஜராஜேச்வரி        

         

         அங்காளப்பரமேச்வரி அகிலலோகநாயகி

         அங்கயற்கண்ணி அகிலாண்டேச்வரி

         பொங்கரவணிந்த உமாமகேச்வரி

         சங்கராபரண ராகப்ரியே கௌரி


          மங்களம் தரும் மதுரை மீனாக்ஷி 

          கங்கையைத்தாங்கும் காசி விசாலாக்ஷி

          சிங்கவாகனி காஞ்சி காமாக்ஷி 

          எங்கும் நிறைந்திருக்கும் ஏகாம்ப்ரேச்வரி

          


          





          

                         


  

         

         

         

          

 

          


         

           


Wednesday, 17 September 2025

சங்காழ்வார்

 



                                   சங்காழ்வார்


                                        பல்லவி

                        சங்காழ்வார் வாழி பாஞ்சஜன்யம் வாழி

                        பொங்கரவணை துயிலும் திருமாலின் கரத்திலங்கும்

                                        அனுபல்லவி

                        மங்காத புகழ் மேவும் திருப்பாற்கடலில்

                        மங்களமாய் கடலன்னையுடனவதரித்த

                                            சரணம்
                        
                         திங்களும் ஞாயிறும் கங்கையும் வருணனும்

                         அங்கமாய் விளங்கிடும் ஓங்கார நாதம் தரும் (சங்காழ்வார்)
              

                        செங்கண்மால் கேசவன் பாரதப் போரில்

                        எங்கும்  முழக்கமிட்ட பெருமைக்குரிய   ( சங்காழ்வார் )



*பாஞ்சஜன்யம்*


பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த 

சங்கு தான்!


ஒரு சங்கில்  , உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்! 

மொத்தத்தில் ஐந்து சங்குகள்!

ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.


பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.


ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.


ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே 

ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.


வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.


சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.


சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். 


அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் !!


இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 




Friday, 22 August 2025

கற்பனைக்கெட்டாத…..

 


      

                                   கற்பனைக்கெட்டாத…..


                                                 பல்லவி

                               கற்பனைக்கெட்டாத அழகுடைய

                               கற்பக விநாயகனை தினம் துதித்தேன்

                                              அனுபல்லவி

                               சிற்பரன்  சிவன் மகனைக் கேசவன் மருகனை

                               மற்பொருள் திரள் புய  ஆனைமுகத்தோனை               

                                                 சரணம்                                

                              சொற்களால் வர்ணிக்க இயலாத வடிவுடைய

                              அற்புத உருவம் கொண்ட மகாகணபதியை

                               பற்பல கருமங்கள் விகற்பமின்றி நடைபெற 

                              விற்பன்னர் வேதியர்  பணிந்தேத்தும்


                             

 

                              




Monday, 18 August 2025

பரிந்தருள் புரிவாய்…..

 

                  பரிந்தருள் புரிவாய்…..


                             பல்லவி

               பரிந்தருள் புரிவாய் தாயே பராசக்தி

                அரியயன் அரன்பணி கேசவன் சோதரி

                           அனுபல்லவி

                 எரிதழலேந்தும் ஈசன் பங்கிலுறை

                 கரிய நிறத்தவளே சங்கரி கௌரி

                                 சரணம்

                  விரிந்து பரந்த மாய உலகில்

                  சரியும் தவறும் நெறியறியாமல்

                  புரியதவனாய் சுற்றித் திரிந்தேன்

                  வறியவன் எனையே அரவணைத்தெடுத்து


Saturday, 9 August 2025

அரங்க நாயகி உடனுறை…..

 பெருந்துயில் வளர் பொன் அரங்கா விழி

மலர்ந்தருள் மணிரங்கா!

செந்திருமகிழ்ந்துறை அந்தரங்காவல்

வினைகளைந்தெனை ஆள் அரங்கா!


அறிந்தும் அறியாமலும் செய்த பிழைகளைப் பொறுத்து, தடுத்தாட்கொள்ளும் தயை நிதி அல்லவா?


நமது வேண்டுதலைக் கேட்டு, பள்ளி கொண்ட பெருமாள் முன் நிற்கும் உத்ஸவ ரங்கன் சிரிப்பதாகத் தோன்றுகிறது. அவனருகே ஸ்ரீதேவி - பூதேவி நாச்சியர்களும் சிரிக்கின்றனர்.


நமக்குப் பின் காத்திருக்கும் பக்தர்களுக்கு வழிவிட்டு நகர்ந்தாலும் அரங்கனை மனக்கண்ணில் படம்பிடித்து, நெஞ்சத் திரையில் நிலை நிறுத்திக்கொள்கிறோம். 


அவரை இங்கே விட்டுச் சென்ற விபீஷணனும் அதைத்தான் செய்திருப்பான் போலும்!


ராகம்: 

நாயகி; தாளம்: ஆதி பல்லவி: ரங்கநாயகம் பாவயே ஸ்ரீ ரங்கநாயகி சமேதம் ஸ்ரீ (ரங்க...)


அனுபல்லவி: அங்கஜதாத மனந்தமதீதம் அஜேந்த்ராத்யமரனுதம் ஸததம்

உத்துங்க விஹங்கதுரங்கம் க்ருபாபாங்கம் ரமாந்தரங்கம் ஸ்ரீ (ரங்க...)


சரணம்:


ப்ரணவாகார திவ்யவிமானம் ப்ரஹ்லாதாதி பக்தாபிமானம்

கணபதி ஸமான விஷ்வக்ஸேனம் கஜதுரகபதாதிஸேனம்

தினமணிகுல பவராகவாராதனம் மாமகவிதேஹ முக்திஸாதனம் 

மணிமயஸதனம் சசிவதனம் பணிபதி சயனம் பத்மநயனம்

அகணிதசுகுண கணநதவிபீஷணம் கனதரகௌஸ்துப மணிவிபூஷணம்

குணிஜனக்ருத வேதபாராயணம் குருகுஹமுதித நாராயணம் ஸ்ரீ (ரங்க...)


பொருள்: ரங்கநாயகியுடனான ரங்கநாதரை தியானிக்கிறேன். மன்மதனின் தந்தை; ஆதி - அந்தம் அற்றவன், அனைத்தையும் கடந்தவன்; 


பிரமன் மற்றும் இந்திராதி தேவர்களால் போற்றப்படுபவன்; கருடனை வாகனமாகக் கொண்டவன்; கருணை நிரம்பிய கண்களையுடையவன்; லக்ஷ்மிக்கு அந்தரங்கமானவன்.


பிரணவாகார விமானத்தை உடையவன். பிரஹலாதன் முதலான பக்தர்களால் வணங்கப்பட்டவன். விநாயகருக்கு ஈடான விஷ்வக்ஸேனரை ஸேனாபதியாய் உடையவன். 


முப்படைகள் உடையவன். சூரிய குலத் தோன்றலான ஸ்ரீராமனால் பூஜிக்கப்பட்டவன். முக்தியைத் தரவல்லவன். நவரத்தினங்கள் இழைத்த ஆலயத்தில், சந்திரன் போன்ற முகப்பொலிவுடன் ஆதிசேஷன் மீது துயில்பவன். 


தாமரைக் கண்ணன். ஒப்பற்ற குணவானான விபீஷணனால் பூஜிக்கப்பட்டவன். கௌஸ்துப மணியை அணிந்துள்ளவன். வேத பாராயணம் செய்யும் குணவான்களின் இறைவன். குருகுஹனுக்கு மகிழ்வூட்டும் ஸ்ரீமன் நாராயணன்.



                              அரங்க நாயகி உடனுறை…..


                                               பல்லவி

               அரங்க நாயகி உடனுறை அரங்கனைத்துதித்தேன்

               ஆதியந்தமில்லாதவனை அனைத்தும் கடந்தவனை 

                                          அனுபல்லவி

                பிரமனிந்திரன்  சுகசனகாதியர் நாரதர் மற்றும்

                நரர் சுரர் வணங்கும்  மன்மதனின் தந்தையை

                                               சரணம்

               கரன் முரனை வதைத்தவனை காகுத்தன் துதித்தவனை

               அரவணை துயில்பவனை கமலக்கண்ணன் கேசவனை

               வீடணனும் மறையோதுமந்தணரும் வணங்கும்

               கருடவாகனனை ஶ்ரீமன் நாராயணனை 

                                   *****

                 पल्लवि

रङ्ग नायकं भावये 
रङ्ग नायकी समेतं श्री

अनुपल्लवि
अङ्गज तातं अनन्तं अतीतं
अज-इन्द्र-आदि-अमर नुतं सततं
उत्तुङ्ग विहङ्ग तुरङ्गं 
कृपा-अपाङ्गं रमा-अन्तरङ्गम्

चरणम्
प्रणव-आकार दिव्य विमानं 
प्रह्लाद-आदि भक्त-अभिमानं
गण पति समान विष्वक्सेनं
गज तुरग पदाति सेनम्
दिन मणि कुल भव राघव-आराधनं
मामक विदेह मुक्ति साधनं
मणि-मय सदनं शशि वदनं
फणि पति शयनं पद्म नयनम्
अगणित सु-गुण गण नत विभीषणं
घन-तर कौस्तुभ मणि विभूषणं
गुणि जन कृत वेद पारायणं
गुरु गुह मुदित नारायणम्

                      


                


                

    


                                   

Thursday, 12 June 2025

பரமேச்வரி பரிபூரணி……

 



                                        பரமேச்வரி பரிபூரணி……


                                                   பல்லவி


                               பரமேச்வரி பரிபூரணி பர்வதகுமாரி

                               அரனயன் கேசவன் பணியுமுனைப்பணிந்தேன்

                                                     துரிதம் 

                              நரர் சுரர் நாரதர் சிங்கார வேலன்

                              நர்த்தன கணபதி வணங்கித்துதித்திடும்


                                               அனுபல்லவி


                              புரமெரித்த பரமன் கபாலீசன் நாயகியே

                              கரமலர் காண்பித்தபயம் தரும் கற்பகமே


                                                 சரணம்

                            வரந்தரும் கரமுமபயகரமும் காட்டும்

                            அராளகேசியே அபிராமவல்லியே

                            அரக்கன் சும்ப நிசும்பரை மாய்த்த

                            திரிபுரசுந்தரியே வடிவாம்பிகையே                          

                            

                              



                                                

                              

                        

    


  

Sunday, 8 June 2025

 

     

                 ஆனந்தம் தரும்…..


                                            பல்லவி


       ஆனந்தம் தரும் உலகநாயகனே

       ஜானகிராமனே உனைத் துதித்தேன்


                   அனுபல்லவி


       வானும் புவியுமளந்த தாடாளனே

       கானகம் சென்று தந்தைசொல் காத்தவனே


                      சரணம்


       தானந்தமில்லாத தேனே இன்னமுதே

       ஈனமான பொருளில் ஈடுபாடில்லாதவனே

       ஊனம் களைந்தென் மன இருள் நீக்கும்

       தீனசரண்யனே தினகரகுலத்தோனே

    

       தானமும் தவமும் நன்னெறியறிவும்

       நானென்றும் பெற்றிட நல்லருள் தருபவனே

       பானுவும் சந்திரனும் கண்களாய் விளங்கும்

       ஞான சூரியனே நான்மறைப் பொருளே


       மீனுருவாய்த்தோன்றி உலகை மீட்டவனே

       மானினைத்தேடியலைந்த மாதவனே

       வனிதையின் சாபம் தீர்த்த ராகவனே

       கனி தந்த சபரிக்கு மோட்சமளித்தவனே