Wednesday, 17 September 2025

சங்காழ்வார்

 



                                   சங்காழ்வார்


                                        பல்லவி

                        சங்காழ்வார் வாழி பாஞ்சஜன்யம் வாழி

                        பொங்கரவணை துயிலும் திருமாலின் கரத்திலங்கும்

                                        அனுபல்லவி

                        மங்காத புகழ் மேவும் திருப்பாற்கடலில்

                        மங்களமாய் கடலன்னையுடனவதரித்த

                                            சரணம்
                        
                         திங்களும் ஞாயிறும் கங்கையும் வருணனும்

                         அங்கமாய் விளங்கிடும் ஓங்கார நாதம் தரும் (சங்காழ்வார்)
              

                        செங்கண்மால் கேசவன் பாரதப் போரில்

                        எங்கும்  முழக்கமிட்ட பெருமைக்குரிய   ( சங்காழ்வார் )



*பாஞ்சஜன்யம்*


பாஞ்சஜன்யம் என்பது ஒரு அபூர்வமான சங்கு!

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் கைகளில் இருப்பது இந்த 

சங்கு தான்!


ஒரு சங்கில்  , உள்ளே 4 சங்கங்கள் இருக்கும்! 

மொத்தத்தில் ஐந்து சங்குகள்!

ஆகவே பாஞ்சஜன்யம் என்பார்கள்.


பாஞ்சஜன்யம் என்பது கடலில் கிடைக்கும் ஒரு சங்கு தான். ஆனால் அந்த சங்கு சாமான்யமாக கிடைப்பதில்லை.


ஆயிரம் சிப்பிகள் சேருமிடத்தில் ஒரு இடம்புரி சங்கு கிடைக்குமாம்.


ஆயிரம் இடம்புரி சங்குகள் விளையும் இடத்தில் ஒரே 

ஒரு வலம்புரி சங்கு கிடைக்குமாம்.


வலம்புரி சங்குகள் ஆயிர கணக்கில் எங்கு இருக்கிறதோ அங்கே அரிதான சலஞ்சலம் என்ற சங்கு கிடைக்குமாம்.


சலஞ்சலம் சங்கு பல்லாயிர கணக்கில் உற்பத்தியாகுமிடத்தில் அரிதான பாஞ்சஜன்ய சங்கு கிடைக்கும்.


சுத்தமாக அக்ஷரம் பிசகாமல் பிரணவ மந்திரத்தை ஒலிப்பது பாஞ்சஜன்யம் சங்கு மட்டும் தான். 


அந்த சங்கு கிருஷ்ணன் கையில் மட்டும் தான் இருக்கும் !!


இப்படிப்பட்ட அபூர்வமான பாஞ்சஜன்ய சங்கு மைசூரில் உள்ள ஸ்ரீசாமுண்டீஸ்வரி தேவியின் ஆலயத்தில் அன்னையின் அபிஷேகத்திற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 




No comments:

Post a Comment